Search This Blog

Tuesday 8 May 2018

நித்தியர்கள், முக்தர்கள், பத்தர்கள்


முன்னுரை சனாதன தருமத்தில் திருமாலே பரம்பொருள் என்று முழங்கும் மார்க்கம் வைணவம். வைணவத்தில் பல பிரிவுகள் உள்ளன. அவற்றுள் ஒன்று ஸ்ரீ இராமானுச தரிசனம் - இந்த மார்க்கத்தில் ஆழ்வார்களின் தமிழ் மறையான 4000 அருளிச்செயல்களே பரம பிரமாணம்; இந்த மார்க்கத்தில் பெரியோர்கள் ஆழ்வார்கள் அருளிய தமிழ் மறைகளைக் கொண்டே வடமொழி மறைகளுக்கும் உபநிடதங்களுக்கும் (பிரம்மசூத்திரங்களுக்கும்) விசிட்டாத்துவைத்த முறையில் பொருள் கொண்டுள்ளனர்.

ஸ்ரீவைணவத்தின் படி இந்தப் பிரபஞ்சம் நித்திய விபூதி என்றும் லீலா விபூதி என்றும் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றது.

நித்திய விபூதி:
• நம் புலன்களுக்கும் மற்றும் தொடக்கம் / முடிவு ஆகிய எல்லைகளுக்கும் அப்பாற்பட்டது
• அந்தமில் ஞானம் மற்றும் பேரின்பம் பெற்றுத் திகழும் பரமபதம்
• எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் தேவிமார்களுடனும் அடியார்களுடனும் இங்கு வீற்றிருக்கின்றார்

லீலா விபூதி:
• நாம் வாழும் இவ்வுலகம் உள்பட பல கோடி உலகங்கள் (பிரம்மாண்டங்கள்) கொண்டது
• தொடக்கம்/ முடிவு ஆகிய எல்லைகளுக்கு உட்பட்டது
• சுவர்க்கம் நரகம் ஆகியவையும் இதில் அடக்கம்

ஜீவாத்மாக்கள் மூவகை – நித்தியர்கள், முக்தர்கள், பத்தர்கள்

வகை விபூதி விளக்கம் உதாரணம்
நித்தியர் நித்திய தொடக்கம் முடிவு எதுவும் இல்லாமல் அங்கேயே வசிப்பவர்கள் ஸ்ரீமஹாலக்ஷ்மி, திருவனந்தாழ்வான், சக்கிரத்தாழ்வார்
முக்தர் நித்திய ஜன்மங்கள் பல செய்து முடிவாக பிறப்பு இறப்பு சூழலைத் தகர்த்துப் பரமபதம் அடைந்து உய்ந்தவர்கள் நம்மாழ்வார், நம்பாடுவான்
பத்தர் லீலா பிறப்பு இறப்பு சூழலுக்குள் இருக்கும் கட்டுண்டவர்கள் நம் போன்ற ஜீவாத்மாக்கள்


இறைவன் பத்தர்களாக இருக்கும் நம்மை முக்தர்கள் ஆக்கவே விழைகின்றான்.


No comments:

Post a Comment